நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்கிடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்கிடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்</strong></p>
<p>சென்னை, டிச.31- நியாய விலைக்க கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை, கரும்பு) தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதையொட்டி பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டுமெனவும், கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமெ னவும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கை களும், எதிர்பார்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே, இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கிலோ வெல்லம் வழங்கிடவும், அதேபோல கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p>
