முந்தய பக்கம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்

14 May 2026, 11:38 pm
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்
<p><strong>டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்</strong></p><p>அவிநாசி, மே 14- அவிநாசி அருகே நல்லிக் கவுண்டம்பாளையம் பகுதி யில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ் மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, அப் பகுதி பொதுமக்கள் வியாழ னன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நல்லிக் கவுண்டம்பாளையம் பகுதியில் 2326 எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. </p><p>இக்கடையால் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், சமூக விரோதச் செயல் கள் அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். </p><p>இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p> இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள், கடையை வேறு இடத் திற்கு மாற்ற வலியுறுத்தி கடையின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>தகவலறிந்து வந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>அப்போது பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். </p><p>அந்த மனுவின் மீது உரிய முறை யில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram