மின்சார பேருந்துகள் தனியார்மயமாக்கலை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்
20 Jan 2026, 2:46 pm
<p><strong>மின்சார பேருந்துகள் தனியார்மயமாக்கலை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், ஜன.20- மின்சார பேருந்துகளை தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஒப்பந்த அடிப்படை யிலும், வாடகை முறையி லும் தனியார் நிறுவனங்களி டம் இயக்க அனுமதிப்பதை கண்டித்தும், மின்சார பேரு ந்துகளை முறையாக அரசு போக்குவரத்து கழகமே இயக்க வேண்டும் என வலி யுறுத்தியும், அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் திரு வில்லிபுத்தூர், வத்திராயி ருப்பு, இராஜபாளையம் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பணிமனை களில் திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு கிளை தலை வர் தென்னரசு தலைமை தாங்கினார். ஏஐடியுசி கிளைச் செயலாளர் கடல்கனி முன் னிலை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி சிஐடியு மத்திய சங்க மண்டல உத விச் செயலாளர் முனீஸ்வ ரன், ஏஐடியுசி மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செய லாளர் திருமலை ஆர்ப் பாட்டத்தை வாழ்த்திப் பேசி னார். சிஐடியு சார்பில் மரிய டேவிட் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு போக்கு வரத்து கழக பணிமனை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஏஐ டியுசி கிளைச் செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். சிஐடியு மத்திய சங்க மண்டல உதவிச் செயலாளர் முனீஸ்வரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் சிஐடியு கிளைத் தலைவர் லோக நாதன், ஏஐடியுசி கிளை பொருளாளர் ஆனந்த் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங் கத்தினர் கலந்து கொண்ட னர். இதேபோல், இராஜ பாளையம் போக்குவரத்து கழக பணிமனையிலும் அனைத்து தொழிற்சங்கங்க ளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
