பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
19 May 2026, 9:11 pm
<p><strong>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, மே 19 - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வலி யுறுத்தித் தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி மாண வர் மற்றும் வாலிபர் அமைப்புகள் இணைந்து செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. </p><p>இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை சைதாப் பேட்டை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் இப்போராட்டத்தை முன்னெடுத்தன. </p><p>ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் சி.மிருதுளா, “தேசிய தேர்வு முகமை (NTA) தொடர்ந்து தேர்வுகளை முறையாக நடத்தத் தவறி, மாணவர்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. </p><p>நீட் தேர்வு மற்றும் ஜூன் 21 அன்று அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு ஆகியவற்றினை முழுமையாக ரத்து செய்துவிட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும். </p><p>இது குறித்துத் தமிழ்நாடு முதல மைச்சர் சி.ஜோசப் விஜயிடம் நேரில் வலி யுறுத்திய போது, உரிய முன்னெடுப்புகளை மேற் கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.</p><p> இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.அமர்நீதி தலைமை வகித்தார்.</p><p> இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் தீ.சந்துரு, மாவட்டத் தலைவர் என்.குமரன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நிர்வாகி விஷ்ணு மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற் றுப் பேசினர்.</p><p>பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.</p>
