நீதிபதி பணியிட மாற்றத்தை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்
16 Mar 2026, 4:46 pm
<p><strong> நீதிபதி பணியிட மாற்றத்தை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கடலூர், மார்ச் 16- கடலூர் மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூரில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்குப் பழங்குடி யினர் இருளர் பாது காப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு தலைமை தாங்கினார். கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஆதிமூலம் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் போராட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், வி.சி.க மாநில துணை செயலாளர் ஸ்ரீதர், இஸ்லாமியர் கூட்டமைப்பு தலைவர் அஸ்மா நஸ்ருதீன், பழங்குடி விடுதலை இயக்கம் ஏகாம்பரம், இருளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சிவகாமி, செயலாளர் ஆறுமுகம், மீனவர் விடுதலை வேங்கை கள் கட்சி பரசுராமன், சிபி எம் மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தமிழ்நாடு மீன வர் பேரவை மாநில செய லாளர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.</p>
