முந்தய பக்கம்

நில உரிமைக்காக போராடிய மக்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

21 Nov 2025, 5:11 pm
நில உரிமைக்காக போராடிய மக்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
<p><strong>நில உரிமைக்காக போராடிய மக்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், நவ.21- கரூர் வெண்ணெய் மலையில் நில உரி மைக்காக போராடிய மக்களை காவல் துறையை வைத்து கைது செய்த அராஜ கத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் &nbsp;சங்கத்தினர் வெள்ளியன்று ஊத்துக்குளியில் &nbsp;கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா &nbsp;செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் நில &nbsp;உரிமையை பறிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். இனாம் நிலம், குத்தகை விவசாயம், அடிமனை பயனாளிகளுக்கு எதி ராக செயல்படும் அறநிலையத்துறை, வக்ப் &nbsp;போர்டு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமி ழக அரசு உரிய சட்ட திருத்தத்தை கொண்டு &nbsp;வர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி னர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வடுக பாளையம் வீடு, மனை உரிமையாளர் சங்க தேவசேனா பல. சண்முகம், அடிமனை பய னாளிகள் சங்க கை.குழந்தைசாமி, மாதர் &nbsp;சங்க மாவட்ட துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். முடிவில் சிஐடியு நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram