தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

21 Jan 2026, 3:58 pm
தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன.21- தொழிற்பயிற்சி நிலை யங்களில் உள்ள காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி திருப்பூர் தொழிற்பயிற்சி நிலையம் &nbsp;முன்பு புதனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்ப யிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.நஞ்சப்பன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிற்ப யிற்சி நிலையங்களில் பணிபுரியும் சான்றிதழ் &nbsp;தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க &nbsp;வேண்டும். ஐடிஐயில் வர்க்சாப் அஸ் ஸிஸ்டெண்ட், உதவி இளநிலை பயிற்சி அலு வலர், உதவி பயிற்சி அலுவலர், பயிற்சி, முதல்வர் காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். ஜெ.டி.ஒ பணி நியம னத்தில் 1:1 என்பதை அமல்படுத்த வேண்டும். &nbsp;தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சிஒஇ மற் றும் பிபிபி பயிற்றுநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2005 ஆம் ஆண்டு &nbsp;பணியில் சேர்ந்த பணிமனை பண்டக உதவி யாளர்களின் பணிக்காலத்தை பணிக்கால மாக வரன்முறைப்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை விளக்கி கிளைச் செயலா ளர் என்.பசுபதி பேசினார். அரசு ஊழியர் சங்க &nbsp;மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன், பொருளாளர் ஜெ.அந்தோனி ஜெயராஜ், தெற்கு வட்டக்கிளை துணைத் தலைவர் சரவ ணன் ஆகியோர் வாழ்த்து பேசினர். முடிவில் &nbsp;கிளை பொருளாளர் எஸ்.சிவகுமார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.