முந்தய பக்கம்

தூண்டில் வளைவு அமைக்க கோரி மறியல்

4 Dec 2025, 3:52 pm
தூண்டில் வளைவு அமைக்க கோரி  மறியல்
<p><strong>தூண்டில் வளைவு அமைக்க கோரி &nbsp;மறியல்</strong></p> <p>புதுச்சேரி, டிச.4- சின்ன காலாப்பட்டு கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி சாலை மறியல் &nbsp;போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு பகுதிகளில் சுமார் 200 படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் சின்ன காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு,மீனவ மக்களின் வீடுகள், இடிந்து வருவதோடு, ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 படகுகள், வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது பெய்த கனமழையால் மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், &nbsp;நிரந்தர தீர்வாக தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் சின்ன காலாப்பட்டு &nbsp; &nbsp;கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற, சாலை மறியல் போராட்டத்தில்,மீனவர்கள் &nbsp;தங்களது படகுகளையும், மீன்வலைகள் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்த காலாப்பட்டு காவல் நிலைய போலீசார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.<br /> &nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram