தரக்குறைவாக பேசும் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
12 Jan 2026, 7:20 am
<p><strong>தரக்குறைவாக பேசும் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.12- திருப்பூர் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர் லோ.பூபா லன் ஆசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் விரோதமாக தான்தோன்றித்தனமாக செயல்படுவதாகக் கூறி, தமிழ்நாடு கொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ டிக்கைக் குழு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. வடக்கு வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இது குறித்து ஆசிரியர்கள் பேசு கையில், கல்வி அலுவலர் லோ.பூபாலன், பரமசிவம்பாளை யம் பள்ளியை இழுத்து மூடுவேன் என்கிறார். பிரச்சனைகள் குறித்து ஆசிரியர்கள் சந்திக்க திருப்பூர் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலகம் சென்றால் அலுவலகத்தில் அவர் இருப்ப தில்லை. அலுவலக நடைமுறைகளை தன் மனநிலைக்கு ஏற்ப மாற்றுகிறார். இதனால் கல்வித்துறை பணிகள் முடங்கி கிடக்கி றது. பள்ளிக்கு வராத பிள்ளைகளை வீட்டுக்குச் சென்று அழைத்து வருவதை ஆசிரியர் பணியே அல்ல. மாணவர்கள் வராததை ஆசிரியர்கள் கண்டு கொள்ளன்கூடாது என்கிறார். பிரச்சனை சார்ந்து சந்திக்க வரும் சங்கப் பொறுப்பாளர்கள் மீது காவல்துறையில் பொய்யான புகார் கொடுக்கிறார். பெண் ஆசிரியர்களை கற்றல் கற்பித்தல் பணிகளை செய்ய விடாமல், தான்தோன்றித்தனமாக அர்த்தமற்ற முறையில் பேசுவது, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுகிறார். பிச்சை எடுக்க வைப்பேன், வேலையை தொலைத்து விடுவேன் என அச்சுறுத்துகிறார். ஏற்கனவே திருவண்ணாமலையில் பெண் ஆசிரியர்களை தொடர்ந்து ஏளனமாக. மரியாதைக்குறை வாக பேசியது உள்ளிட்ட செயல்பாட்டால் அங்கிருந்து பணி மாறுதலாகி இங்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜன.30 ஆம் தேதி திருப்பூர் வடக்கு வட்டாரக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நௌசாத் தலைமை வகித்தார். டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் ர.பாலசுப்பி ரமணியன், பா.ரவிக்குமார், நாகராஜ், கணேஷ்குமார், எஸ். மோகன், கி.ராஜசேகர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர்.</p>
