பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை திரும்ப
16 Jun 2026, 1:00 am
<p>பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூன் 13) மடிப்பாக்கம் சாலையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே.வி.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார். பகுதிக்குழு உறுப்பினர் கே.மோகன்ஜி, கிளைச் செயலாளர்கள் முரளி ( மூவரசம்பட்டு), கோகுல் (நங்கநல்லூர்) உள்ளிட்டோர் பேசினர்.</p>
