பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது எனது முதன்மைப்பணி
8 Apr 2026, 5:30 am
<p><strong>பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது எனது முதன்மைப்பணி</strong></p><p>மேட்டுப்பாளையம், ஏப். 7- மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.சண்முகசுந்தரம், பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பதே எனது முதன்மைப் பணி எனத் தெரிவித்தார்.</p><p>மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பவானி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்கவும், கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p>மேலும், தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கவும் பாடுபடுவேன் என அவர் கூறினார்.</p>
