சாலையோர வியாபாரிகளை பாதுகாத்திடுக! இராமேஸ்வரம் கிளை அமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>சாலையோர வியாபாரிகளை பாதுகாத்திடுக! இராமேஸ்வரம் கிளை அமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்</strong></p>
<p>இராமநாதபுரம், பிப்.25- இராமநாதபுரம் மாவட் டம் இராமேஸ்வரத்தில் சாலையோர வியாபாரிகள் சங்க பேருந்து நிலைய கிளை அமைப்புக் கூட்டம் எம்.மாரி முத்து தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.பி.செந்தில், பொறுப்பா ளர் ஏ.முருகன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஏ.சுடலைகாசி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தலைவராக கே.செய் யது, செயலாளராக எம்.மாரி முத்து, பொருளாளராக என். மணிகண்டன் ஆகியோர் உள்பட 19 பேர் கொண்ட நிர் வாக குழு தேர்வு செய்யப்பட் டது. 2014 ஆம் ஆண்டில் ஒன் றிய அரசும், 2015 ஆம் ஆண் டில் மாநில அரசும் நிறை வேற்றிய சாலையோர வியா பாரிகள் பாதுகாப்புச் சட் டத்தை இராமேஸ்வரத்தில் அமல்படுத்தி சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும். நான்கு ரத வீதி கள், சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் சாலையோரமாக வியாபா ரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளை மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
