மும்மொழிக் கொள்கையா? இந்தித் திணிப்பா?
13 Apr 2026, 5:30 am
<p><strong>மும்மொழிக் கொள்கையா? இந்தித் திணிப்பா? </strong></p><p><br></p><p>“தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த அதிமுக-விடம் பாஜக வலியுறுத்தும்” எனப் பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார். முதலில் அதிமுக ஆட்சிக்கு வரும் என்ற இவரது கனவே பலிக்கப்போவதில்லை. அப்படியே வந்தாலும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்க முயல்வதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.</p><p>இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டின் ரத்தத்தில் ஊறிய வரலாறு. 1960-களில் நடந்த மொழிப்போர் இன்றும் மக்களின் மனதில் பசுமையாக உள்ளது. மொழியைச் சிதைப்பது என்பது பாசிசத்தை நோக்கிய ஒரு நகர்வாகும். பாஜகவின் சேவகர்களாக மாறியவர்கள் இன்று இந்தியை ஆதரிப்பார்கள், நாளை சமஸ்கிருதத்தை வழிமொழிவார்கள். இவர்களிடம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.</p><p><br></p>
