நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் தனியார்மயம்
8 Dec 2025, 4:39 pm
<p>நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் தனியார்மயம் கைவிடுதல், பணி நிரந்தரம் செய்தல், அரசாணை படி குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி திங்களன்று (டிச. 8) ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஆ. தவராஜ், மாவட்டப் பொருளாளர் ஜி. ஹேமாவதி, வாலாஜா தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கம் செயலாளர் ஏ. ரமேஷ், ஆட்டோ சங்கர் மாவட்ட செயலாளர் பி. மணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி. ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.</p>
