தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் ஆதரவற்ற முதியவருக்கு தனியார் அறக்கட்டளை அடைக்கலம்

26 Dec 2025, 4:32 pm
திருப்பூரில் ஆதரவற்ற முதியவருக்கு  தனியார் அறக்கட்டளை அடைக்கலம்
<p><strong>திருப்பூரில் ஆதரவற்ற முதியவருக்கு &nbsp;தனியார் அறக்கட்டளை அடைக்கலம்</strong></p> <p>திருப்பூர், டிச.26 - திருப்பூரில் ஆதரவின்றி பரிதவித்த முதி யவருக்கு நியூ தெய்வா சிட்டி அறக்கட் டளை மறுவாழ்வு இல்லத்தில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா போத்தம்பாளையத்தில் நியூ &nbsp;தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு &nbsp;இல்லம் இயங்கி வருகிறது. கடந்த சில &nbsp;தினங்களுக்கு முன்பு, திருப்பூர் அனுப்பர்பா ளையம் பகுதி தண்ணீர்பந்தல் காலனி சிக் னல் புறவழிச்சாலை சந்திப்பில், பிளாட்பார &nbsp;வாழைப்பழக் கடையில் மூர்த்தி, (வயது 65) &nbsp;என்பவர் வேலை பார்த்து வந்தார். மதுரை &nbsp;மாவட்டத்தை சேர்ந்த மூர்த்திக்கு திருமணம் &nbsp;ஆகவில்லை. உறவினர்கள் பற்றிய விபரமும் &nbsp;தெரியவில்லை. தள்ளுவண்டி வாழைப்பழக் கடையில், கடந்த 5 வருடங்களாக வேலை பார்த்து வந்த தாக இவரது கடை உரிமையாளர் செவ்வி &nbsp;தெரிவித்தார். எனினும் கடந்த சில மாதங்க ளாக உடல் நலக் குறைவு காரணமாக இவர் &nbsp;படுத்த படுக்கையாகி விட்டார் என்று செல்வி &nbsp;மறுவாழ்வு இல்ல நிர்வாகிக்கு தெரிவித்தி ருக்கிறார். இதனைத் தொடர்ந்து நியூ &nbsp;தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு &nbsp;இல்லத்தில் தங்க வைத்து பாதுகாப்பு வழங்க &nbsp;கேட்டுக் கொண்டார். &nbsp;இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி 11 &nbsp;ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், இந்திய &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.செல்வ ராஜிடம் ஒப்புதல் பெற்றும், கடந்த டிசம்பர் 23 &nbsp;அன்று திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் &nbsp;நிலையத்தில், தெரியப்படுத்தி காவல்துறை அனுமதி சான்றிதழ் பெறப்பட்டது. &nbsp;பின்னர் ஆதரவற்ற, உடல் நலம் பாதிக்கப் பட்ட மூர்த்தியை தண்ணீர் பந்தல் காலனி சிக் னல் புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து &nbsp;பொதுமக்களின் ஆதரவோடு போதம்பாளை யத்தில் உள்ள அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அழைத்து வந்தனர். இவரை மறு வாழ்வு இல்லத்தில் தங்க வைத்து, முடித்தி ருத்தம், முகச்சவரம் செய்து குளிக்க வைத்து &nbsp;தூய்மைப்படுத்தி புத்தாடைகள் அணிய வைத்தனர். உணவு குடிநீர் வழங்கி நிரந்தர பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்குவதாக அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ந. தெய்வராஜ் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.