தனியார் பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
30 Jun 2026, 1:04 am
<p><strong>தனியார் பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி</strong></p><p>ஈரோடு, ஜூன் 29- ஈரோடு – கோயம்புத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் கட்ட ணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக பய ணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். </p><p>கோவை – ஈரோடு செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இதுவரை பயண கட்டணமாக 67 ரூபாய் பெறப்பட்டி ருந்தது. </p><p>தற்போது தனியார் பேருந்து களில் ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் தின சரி பயணம் செய்யும் மாணவர்கள், தொழிலா ளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். </p><p>வெறும் ஒரு பயணத்திற்கு ரூ.8 உயர்வு விதிக்கப்பட்டி ருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> குறிப்பாக தினமும் இரு வேளை பயணம் செய்பவர்களுக்கு மாதாந் திர செலவு கணிசமாக அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.</p><p> இதேபோல, திருப்பூர் - பெருந்துறை: பழைய கட்டணம் ரூ. 22- லிருந்து தற்போது ரூ. 25 ஆகவும், பெருந் துறை - ஈரோடு: பழைய கட்டணம் ரூ. 13-லி ருந்து தற்போது ரூ. 15 ஆக உயர்ந்துள்ளது.</p><p> இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், “தொடர் எரிபொருள் விலை உயர்வு, பேருந்து உதிரிபாகங்களின் விலை ஏற்றம் மற் றும் தினசரி பராமரிப்புச் செலவுகள் கணிச மாக அதிகரித்துள்ளதால், கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது.</p><p> இதுகுறித்து ஏற்கெனவே அரசிடமும் முறைப்படி வலியுறுத்தியுள்ளோம்” என நியா யப்படுத்துகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் போக்கு வரத்து துறை அதிகாரிகள் தலையிட்டு கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். </p><p>அத்தியாவசிய சேவையாக உள்ள பொதுப் போக்குவரத்தில் திடீர் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரி விக்கின்றனர்.</p>
