பிரதமரின் திருச்சி அறிவிப்புகள் மோசடியே! தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>பிரதமரின் திருச்சி அறிவிப்புகள் மோசடியே! தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 12 - “திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜன நாயக கூட்டணி மாநாட்டில் பிரதமர் மோடி ரூ. 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியது, தேர்தலுக்கான வெற்றி அறிவிப்பே!” என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மதுரை எய்ம்ஸ் இன்னும் நிறை வேறாததை சுட்டிக்காட்டியிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மதுரை - கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி, பிரதமர் மோடி பேசுவது வேடிக்கையானது என்று விமர்சித்துள்ளார். மதுரை மல்லி ஏற்றுமதி பற்றி பேசும் மோடி, இந்திய விவசாயிகளை வஞ்சிக்கும் நாசகர வர்த்தக உடன்பாட்டை அமெரிக்கா வுடன் மேற்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 3 மடங்கு நிதி: பொய்! “கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டதாக மோடி கூறி யது வடிகட்டிய பொய்” என்று சாடியிருக்கும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி “அதற்கான ஆதாரம் காட்ட முடியுமா?” என்றும் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். “எளியோரை வஞ்சித்து கார்ப்பரேட்டு களுக்கு சாதகமாக செயல்படும் மோடி ஆட்சியை தமிழ்நாடு மக்கள் உரிய நேரத்தில் நிராகரிப்பார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.</p>
