தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு? விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

19 Jun 2026, 10:42 pm
தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு? விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வலியுறுத்தல்
<p><strong>தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு? விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வலியுறுத்தல்</strong></p><p>ஈரோடு, ஜூன் 19- தவறான மகப்பேறு அறுவை சிகிச்சையால் இளம்பெண் உயிரி ழந்த புகாரில், 2 ஆண்டுகள் கடந் தும் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய மறுப்பதாக பெற்றோர் குற் றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள மொடச் சூர், சுண்டப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது உறவி னர் வளர்மதி ஆகியோர் வியாழ னன்று ஈரோடு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கிரண் ஸ்ருதியிடம் வியாழனன்று மனு அளித்தனர். </p><p>இதன்பின் செய்தியாளர்களிடம் சக்திவேல் கூறுகையில், எனது மகள் மைதிலி (27), இரண்டாவது மகப்பேறு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில், கடந்த 2024 டிச.29 ஆம் தேதி அனுமதித் தோம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.</p><p>இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட் டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். </p><p>எனது மகள் இறப்புக்கு கோபி அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியரின் தவறான சிகிச்சைதான் காரணம். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய் யக்கோரி எனது மகள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டோம்.</p><p>அப்போது, மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் கட் டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் சடலத்தை பெற்று அடக்கம் செய்யு மாறும், அரசு சார்பில் நல உதவி களையும் வாங்கித் தருகிறோம் என வும் உறுதி அளித்தனர். </p><p>ஆனால், வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத் தில் விசாரணை அறிக்கையை போலீசார் சமர்பிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதற்காக பலமுறை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சம்பந் தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரில் சென்று முறையிட்டும், காலம் தாழ்த்தி வருகின்றனர். </p><p>அதிகாரிகளிடம் கேட்டால், காவல் ஆய்வாளர்கள் மாறிக்கொண்டே உள்ளனர். இப்பிரச்சனை மருத்துவ கவுன்சிலுக்கு சென்று ஆய்வு செய்துதான் வரும் என தெரிவிக் கின்றனர். தாயை இழந்த குழந்தை களுக்கு அரசு சார்பில் இதுவரை எவ்வித உதவியும் செய்து தரப் படவில்லை. </p><p>எனவே, நீதிமன்றத் தில் என் மகள் இறப்பு வழக்கு தொடர்பான விசாரணை அறிக் கையை போலீஸார் விரைவாக தாக்கல் செய்யவும், அரசு உதவி களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.