தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்’ பிரக்ஞானந்தா சாதனை!

6 Jun 2026, 9:15 pm
‘நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்’ பிரக்ஞானந்தா சாதனை!
<p><strong>‘நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்’ பிரக்ஞானந்தா சாதனை!</strong></p><p>ஓஸ்லோ, ஜூன் 6 - நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை தமிழ்நாட்டின் பிரக்ஞா னந்தா பெற்றுள்ளார். நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடைபெற்றது. </p><p>உல கின் முன்னணி 6 வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் 10ஆவது மற்றும் இறுதிச் சுற்றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கீமரை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். </p><p>இதில், கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய பிரக்ஞானந்தா, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி னார். </p><p>இறுதியில் வின்சென்ட் செய்த தவறு களைச் சாதகமாக்கிக் கொண்டு, மிக நேர்த்தியாக விளையாடி முழுமையாக 3 புள்ளிகளைப் பெற்றார். </p><p>இறுதிச் சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா 18 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். வெஸ்லி 17 புள்ளிகள், அலிரேசா பிரோஸ்ஜா 15.5 புள்ளிகள், கார்ல்சன் 13 புள்ளிகள், வின்சென்ட் கீமர் 11 புள்ளி கள், மற்றொரு இந்திய வீரர் டி. குகேஷ் 8 புள்ளிகள் பெற்றிருந்தனர்.</p><p>சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞா னந்தாவிற்கு பிரதமர் மோடி, தமிழக முத லமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தலை வர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள னர். </p><p>முன்னதாக நடைபெற்ற 9 சுற்று களின் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லி சோ 15.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>பிரக்ஞானந்தா 15 புள்ளிகளு டன் 2-ஆவது இடத்திலும், பிரான்ஸின் அலிரேசா பிரோஸ்ஜா 14.5 புள்ளிகளு டன் 3ஆவது இடத்திலும் இருந்தனர். </p><p>இந்திய நேரப்படி சனியன்று அதிகாலை நடைபெற்ற இறுதிச்சுற்றில் வெஸ்லி சோ, அலிரேசா பிரோஸ்ஜா இடையிலான ஆட்டம் டிரா ஆக, வின்சென்ட் கீமர் உட னான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று பட்டம் பெற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.