கூலி உயர்வு வழங்கக் கோரி சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்
7 Dec 2025, 3:52 pm
<p><strong>கூலி உயர்வு வழங்கக் கோரி சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்</strong></p>
<p>தென்காசி, டிச.7 - கூலி உயர்வு வழங்கக் கோரி சங்கரன்கோவிலில் ஞாயிறன்று (டிச.7) விசைத்தறித் தொழிலா ளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் 19 ஆவது நாளை எட்டி யுள்ள நிலையில், ஞாயிறன்று சங்கரன் கோவில் லட்சுமிபுரம் 4 ஆவது தெரு வில் சிஐடியு விசைத்தறித் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.மாரியப்பன் தலைமையில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட் டம் நடைபெற்றது. கூலி உயர்வை முழுமையாக அமல்படுத்தக் கோரி விசைத்தறித் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் மற்றும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விசைத்தறி முதலாளி கள், நிலுவையில் உள்ள கூலி உயர்வை தருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போடப்படும் கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவதற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், புதிய ஒப்பந்தம் 50 சதவீதம் கூலி உயர்வு மற்றும் நிலுவையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விசைத் தறித் தொழிலாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிறன்று கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தை மாநிலத் தலைவர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரத்தினம், மாவட்டப் பொருளாளர் மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் அசோக்ராஜ், உ.முத்துப்பாண் டியன் ஆகியோர் ஆதரித்துப் பேசி னர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் மணிகண்டன் நிறைவுரையாற்றி னார்.</p>
