முதுகலை மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி தபால் மனு
19 Feb 2026, 3:09 pm
<p><strong>முதுகலை மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி தபால் மனு</strong></p>
<p>தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் முதுகலை பயிலும் மாணவர்களுக்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டனர். திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பில், தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு இந்த மனுக்கள் அனுப்பப்பட்டன. இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வி. கோபிநாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மனோஜ் குமார், அரவிந்த் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.</p>
