வாகனங்களை கவன குறைவாக ஓட்டிய ஓட்டுநர்கள் மீது காவல்துறை வழக்கு
28 Nov 2025, 2:28 pm
<p><strong>வாகனங்களை கவன குறைவாக ஓட்டிய ஓட்டுநர்கள் மீது காவல்துறை வழக்கு</strong></p>
<p>சிவகங்கை, நவ.28- கடந்த 27/10/25 அன்று நடைபெற்ற மாமன்னர் மருது பாண்டியர் நினைவு தினம் மற்று 30/10/25 அன்று நடை பெற்ற தேவர் குரு பூஜையையும் முன்னி ட்டு, காளையார்கோவில், சிவகங்கைநகர் & தாலுகா, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் நகர், கீழச்சிவல்பட்டி, திருக்கோஸ்டி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட இடங்களில், வாகனங்களை மிகக் கவனக்குறைவாக அசட்டையாகவும் ஓட்டி, பொதுமக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்தியதுடன், பயணத்தின் போது ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வாகன ஓட்டிகளுக்கு எதிராக மொத்தம் 68 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேற்படி வழக்குகள் 285, 292, 281, 125 பி என் எஸ் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறிய வாகனங்க ளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல் துறையினரால் இதுவரை 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குற்றவாளி கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்தின் வாயிலாக உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்படும். பொதுச்சாலைகளில் இவ்வாறு அசட்டையாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டவும் தங்களுக்கும் பிறரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் செயல்களைத் தடுக்கும் வகையில், சம் பந்தப்பட்ட நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து/இடைநிறுத்துதல் தொடர்பான மேல்நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. வெள்ளியன்று, பாதுகாப்பான முறை யில் வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் “DRIVE SAFE” எனும் வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.</p>
<p> </p>
