திமுக வேட்பாளர் குறித்து அவதூறு: போலீசார் வழக்குப்பதிவு
11 Apr 2026, 5:30 am
<p><strong>திமுக வேட்பாளர் குறித்து அவதூறு: போலீசார் வழக்குப்பதிவு</strong></p><p>பெருந்துறை திமுக வேட்பாளர் குறித்து அவதூறு பரப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவரது பெயரை பயன்படுத்தி தவறாக வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றன.</p><p>இதுகுறித்து திமுக பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், பெருந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
