போத்தனூர் யார்டில் சிக்னல் பராமரிப்புப் பணி: ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்
6 May 2026, 1:03 am
<p><strong>போத்தனூர் யார்டில் சிக்னல் பராமரிப்புப் பணி: ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்</strong></p><p>சேலம், மே 5- கோவை மாவட்டம், போத்தனூர் ரயில்வே யார்டில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பரா மரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரண மாக, மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பாதியில் நிறுத்தப்படும் ரயில்கள் தன்பாத்திலிருந்து புறப்பட்டு மே 6 ஆம் தேதி போத்தனூர் வர வேண்டிய அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16620) கோயம்புத்தூர் சந்திப்பு வரை இயக்க வேண்டும். அதேபோல், கண்ணூரிலிருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16607) மே 6, 7 ஆகிய தேதிகளில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப் படும். மதுரையிலிருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16722) பொள்ளாச்சியுடன் நிறுத்தப்படும். மேட்டுப்பாளையத்திலிருந்து போத்தனூர் வரும் மெமு ரயில் (66615) கோவை சந்திப்புடன் தனது பய ணத்தை நிறைவு செய்யும். </p><p><strong>துவக்க இடத்தில் மாற்றம்</strong></p><p> மறுமார்க்கமாக, கோவையிலிருந்து மதுரை செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (16721) மே 6, 7 தேதிகளில் கோயம்புத்தூருக்குப் பதிலாக பொள் ளாச்சியிலிருந்து மதியம் 3.30 மணிக்குத் துவங்கும். கோவை - கண்ணூர் எக்ஸ்பிரஸ் (16608) பாலக் காட்டிலிருந்து மாலை 3.10 மணிக்கும், போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66616) கோவை சந் திப்பிலிருந்து மாலை 3.45 மணிக்கும் புறப்படும். </p><p><strong>ரயில்கள் தாமதம்</strong> </p><p>பராமரிப்புப் பணி காரணமாக, மே 6-ஆம் தேதி திருவனந்தபுரம் நார்த் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ் பிரஸ் மற்றும் மே 7 ஆம் தேதி திருவனந்தபுரம் நார்த் - கோர்பா ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மதுக் கரை ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு (Regulated) இயக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
