அசாம் தேயிலைத் தோட்டத்தில் மோடி ஷூட்டிங்
2 Apr 2026, 5:30 am
<p><strong>அசாம் தேயிலைத் தோட்டத்தில் மோடி ஷூட்டிங்</strong></p><p>ஏப்ரல் 9ஆம் தேதி அசாமில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வாரத்திற்கு 2 நாள் அசாம் மாநிலத்திற்கு சென்று வருகிறார்.</p><p>இந்நிலையில், அசாம் சென்றுள்ள மோடி, திருசூரிய உள்ள தேயிலைத் தோட்டத்தில் 5 கேமராக்களுடன் சிறப்பு ஷூட்டிங் நடத்தினார். இந்த ஷூட்டிங்கில் தேயிலை பறிக்கும் பெண்களுடன் அவர் கலந்துரையாடினார்.</p><p>தேர்தல் பிரச்சாரத்திற்காக தேயிலை தொழிலாளர்களுடன் உரையாடுவது போன்ற ஷூட்டிங்கிற்கு முன்கூட்டியே ஆட்கள் சேர்க்கப்பட்டு, திரைக்கதை கொடுக்கப்பட்டு குறும்படம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்த வீடியோ குறித்து மோடி கூறுகையில், தேயிலை என்பது அசாம் மாநிலத்தின் ஆன்மா என்றும், தொழிலாளர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.</p>
