பிரதமர் மோடி பிரச்சார ஷூட்டிங்கால் விபரீதம் பொரி வியாபாரிக்கு கொலை மிரட்டல் ; பதற்றத்தில் ஜார்கிராம்
23 May 2026, 9:37 pm
<p><strong>பிரதமர் மோடி பிரச்சார ஷூட்டிங்கால் விபரீதம் பொரி வியாபாரிக்கு கொலை மிரட்டல் ; பதற்றத்தில் ஜார்கிராம்</strong></p><p>கொல்கத்தா மேற்கு வங்க மாநி லம் ஜார்கிராம் பகு தியைச் சேர்ந்தவர் விக்ரம் ஷா.</p><p> இவர் சாலையோ ரத்தில் ‘ஜால்முரி (பொரி - மசாலா)’ வியாபாரம் செய்து வருகிறார்.</p><p> சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி விக்ரம் ஷாவின் கடையில் சிறப்பு ஷூட்டிங் நடத்தினார். </p><p>அந்த கடையில் மோடி மட்டுமே காசு கொடுத்து பொரி - மசாலா வாங்கியது போல 5 கேம ராக்களை வைத்து, அவர் பிரச்சார ஷூட்டிங் எடுத்தார். </p><p>இதனை பாஜக ஆதரவு பெற்ற ‘கோடி மீடியா’ ஊடகங்கள் ‘காசு கொடுத்து பொரி - மசாலா வாங்கிய மோடி யின் எளிமை’ என கடுகு வெடித்து படுகாயம் ஏற்பட்டது போல ஊதி பெரிதாக்கின. </p><p>இந்நிலையில், மோடி வந்து சென்ற பின் தனக்கு தொலைபேசி, வாட்ஸ் அப் மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக வும், இதனால் தனது குடும்பத்தி னர் கடுமையான அச்சத்தில் வாழ்வ தாகவும் விக்ரம் ஷா குற்றம் சாட்டி யுள்ளார். </p><p> இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”பிரதமர் மோடி வந்து சென்ற பின்பு பாகிஸ்தான், வங்கதேசத்துடன் தொடர்புடைய எண்களில் இருந்து எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருகிறது. </p><p>மிரட்டல் விடுத்த நபர் கள் வங்காளம், இந்தி மொழிகளில் மோடி வந்து சென்றதால் அவரது சாலையோரச் சிறிய கடையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக பலமுறை எச்சரித்துள்ள னர். </p><p>எந்த நேரமும் எனக்கு போன் செய்கிறார்கள். </p><p>சிலர் வீடியோ கால் செய்து, கேமராவில் ஆயுதங்க ளைக் காட்டுகிறார்கள். எனது கடையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டு கிறார்கள். </p><p>மோடி எனது கடைக்கு வந்ததால் தான் என்னை இலக்கு வைப்பதாகக் கூறுகிறார்கள்” என செய்தியாளர்களிடம் கண்ணீ ருடன் கூறியுள்ளார். </p><p>கடைக்கு யாரும் வருவதில்லை வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால் விக்ரம் ஷாவின் பொரி - மசாலா கடைக்கு வர உள்ளூர் மக்கள் அஞ்சுகின்றனர். </p><p>இதனால் அவரின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என செய்தி கள் வெளியாகியுள்ளன. </p><p>குறிப்பாக விக்ரம் ஷா வாழும் பகுதியான ஜார்கிராம் பதற்றத்தில் இருப்பதா கவும் கூறப்படுகிறது.</p>
