முந்தய பக்கம்

தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்

8 Apr 2026, 5:30 am
தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்
<p><strong>தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்</strong></p><p>கண்ணூர், ஏப். 7 - &quot;வகுப்புவாத ஒன்றிய அரசை வீழ்த்தவும், தென்னிந்தியாவின் உரிமைகளைக் காக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் தலைமையின் கீழ் நாம் அணிதிரண்டு வருவது காலத்தின் கட்டாயம்.&quot; என்று புகழ் பெற்ற திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.</p><p>கேரள சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய அவர், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>தென்னிந்தியாவின் அரண்கள் தனது உரையில் பிரகாஷ் ராஜ், &quot;நான் இன்று ஒரு பக்கத்தை சார்ந்து நிற்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமது நம்பிக்கையாக பினராயி விஜயன் இங்கே இருக்க வேண்டும் என்று கேரளா தீர்மானிக்கும் என்று நம்புகிறேன். நமக்கு வெறும் கோஷங்களுக்கு மட்டும் வேலை செய்யும் அரசாங்கம் தேவையில்லை; வகுப்புவாத ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடும் தலைமை வேண்டும்.</p><p>அந்த வகையில் கேரளா தென்னிந்தியாவின் நம்பிக்கையாக பினராயி விஜயன் இருக்கிறார். கேரளா வில் பினராயி, தமிழ்நாட்டில் ஸ்டாலின், கர்நாடகாவில் சித்தராமையா இவர்களே நம்மைப் போன்றவர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை&quot; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram