தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.110-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை; டீசல் ரூ.100-ஐ தொடுகிறது 11 நாட்களில் 4ஆவது முறையாக விலையை உயர்த்திய மோடி அரசு

26 May 2026, 9:02 pm
ரூ.110-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை; டீசல் ரூ.100-ஐ தொடுகிறது 11 நாட்களில் 4ஆவது முறையாக விலையை உயர்த்திய மோடி அரசு
<p><strong>ரூ.110-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை; டீசல் ரூ.100-ஐ தொடுகிறது 11 நாட்களில் 4ஆவது முறையாக விலையை உயர்த்திய மோடி அரசு</strong></p><p>புதுதில்லி, மே 26- மேற்கு ஆசிய நெருக்கடியை கையாள முடியாமல் திணறும் ஒன்றிய மோடி அரசு, மக்கள் மீது தொடர்ச்சியாக சுமையை ஏற்றி வருகிறது. </p><p>தனது சிக்கன அறிவிப்புக்குப் பின்னர், பிரதம மோடி கடந்த 11 நாட்களில் பெட் ரோல், டீசல் விலையை 4ஆவது முறையாக உயர்த்தி, நாட்டு மக்கள் மீது தொடர் தாக்குதல் நிகழ்த்தி வருகிறார். </p><p>மே 15 அன்று பெட்ரோல் லிட்ட ருக்கு 3 ரூபாய் 6 காசு, டீசல் 3 ரூபாய் 8 காசு என்ற அளவில் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு, மே 19ஆம் தேதி பெட்ரோல் 74 காசு, டீசல் 78 காசு வரை விலையை உயர்த்தி யது.</p><p> தொடர்ந்து மே 23 அன்று 3ஆவது முறையாக பெட்ரோல் 80 காசும், டீசல் 85 காசும் உயர்த்தப்பட்டது. </p><p>இந்நிலையில், 11 நாட்கள் இடைவெளியில் 4ஆவது முறையாக செவ்வாயன்றும் ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் விலை ரூ.2.61-க்கும், டீசல் விலை ரூ.2.71 அளவிற்கு உயர்த்தி நாட்டு மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. </p><p> அதன்படி சென்னையில் செவ்வாயன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.77 (+2.46) ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.55 (+2.57) ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.