சிறுபான்மையினருக்கு அடிப்படை வசதிகள் கோரி மனு
18 Dec 2025, 5:31 pm
<p><strong>சிறுபான்மையினருக்கு அடிப்படை வசதிகள் கோரி மனு</strong></p>
<p>திருவண்ணாமலை, டிச.18- உலக சிறுபான்மையினர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டத் தலைவர் யாசர் அராபத், மாவட்டச் செயலாளர் அப்துல்காதர், மாவட்டப் பொரு ளாளர் நவாப் ஜான் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். பெண்க ளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குதல், வந்தவாசி அடுத்த மருதாடு, ஓசூர், தேசூர் ஆகிய கிராமங்களில் உள்ள முஸ்லிம் மயானங்களுக்குச் சுற்றுச்சுவர், குடிநீர் மற்றும் மின்சார வசதிகளைச் செய்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலி யுறுத்தப்பட்டன. மேலும், முஸ்லிம் மகளிர் உதவும் குழுக்கள் மூலம் வழங்கப்படும் அரசு நிதிகள் உரிய மக்களுக்குச் சென்றடைவதை ஆட்சி யர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.</p>
