விளையாட்டு மைதானம் கோரி மனு
15 Nov 2025, 4:09 pm
<p><strong>விளையாட்டு மைதானம் கோரி மனு</strong></p>
<p>ஈரோடு, நவ.15- நல்லாம்பட்டி பேரூ ராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரூ ராட்சி தலைவரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், நல்லம்பட்டி பேரூராட்சி, 4 மற்றும் 5 ஆவது வார்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 100க்கும் மேற்பட் டோர் உள்ளனர். இவர்கள் கைப்பந்து விளை யாட்டில் அதிகம் ஆர்வமாக விளையாடி வருகிறார்கள். ஆனால், சரியான உபகரனங் கள், விளையாட்டு மைதானம் இல்லை. இத னால் பல இளைஞர்கள் சிரமபட்டு வருகின்ற னர். வெளியே சென்று விளையாடும் சூழல் உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதியிலே அரசு புறம்போக்கு நிலத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கித்தர வேண்டும் என வலியுறுத்தி நல்லாம்பட்டி பேரூராட்சி தலைவரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ஷாம்பிர வின், தாலுகா செயலாளர் கு.சதீஸ், கிளைத் தலைவர் ப.அருண், கிளைச் செயலாளர் ர. விஷால், திவாகர், ரோகித், ஆகாஷ், மைத் ரேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
