பெருஞ்சிலம்பு பாரதியார் விளையாட்டுக்கழக ஆண்டு விழா ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்
17 May 2026, 10:32 pm
<p><strong>பெருஞ்சிலம்பு பாரதியார் விளையாட்டுக்கழக ஆண்டு விழா ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார் </strong></p><p>தக்கலை, மே 17- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு பாரதியார் விளையாட்டுக் கழகத்தின் 29-வது ஆண்டு விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. </p><p> விளையாட்டுக் கழக தலைவர் லாசர் தேசியக்கொடி ஏற்றினார். மாவட்ட அளவிலான 10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. </p><p>இதைத்தொடர்ந்து மாணவ, மாணவி களுக்கான கலை இலக்கிய போட்டிகள், கிராமிய விளையாட்டுப் போட்டிகள் ,வடம் இழுத்தல் போட்டி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. மாலையில் ஆண்டுவிழா பொதுக்கூ ட்டம் ,பரிசு வழங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது. </p><p>சோபி ராஜன் வரவேற்றார். அறிக்கையை செயலாளர் ஜெல்பின் சமர்பித்தார். இந்நிகழ்ச்சியில் குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பால்தாஸ்,சிலம்பை டென்னின் ஆகியோர் உரையாற்றினர். </p><p>மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிபிஎம் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி சிறப்புரையாற்றினார். </p><p>குமாரபுரம் பேரூராட்சி 11 ஆவது வார்டு கவுன்சிலர் மேரி மெற்றில்டா மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். </p><p> பாரதியார் விளையாட்டு கழக ஆலோசகர் ஜோசப் ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பேசில் நன்றி கூறினார். நிறைவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.</p>
