தேர்தல் வாக்குறுதிப்படி தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம்
20 Dec 2025, 3:38 pm
<p>தேர்தல் வாக்குறுதிப்படி தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு 3-ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் கவியரசு ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.</p>
