குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
15 May 2026, 11:01 pm
<p><strong>குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி</strong></p><p>தஞ்சாவூர், மே 15- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரின் மிக முக்கிய சாலையான சேதுசாலையில், ரயில்வே கேட் அருகே, தார் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். </p><p>பேராவூரணியிலிருந்து பட்டு க்கோட்டை, அதிராம்பட்டினம், கட்டு மாவடி, பெருமகளூர் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைக்குச் செல்லும் பிரதான வழியாக இந்தச் சேதுசாலை உள்ளது. </p><p>பள்ளிகள், கல்லூரி பேருந்துகள், பொதுப் போக்குவரத்து பேருந்துகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இவ்வழியாகச் சென்று வருகின்றன. </p><p>இந்நிலையில், ரயில்வே கேட் அருகே தார் முழுமையாகப் பெயர்ந்து, பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p> இரவு நேரங்களில் இந்தப் பள்ளங்கள் சரியாகத் தெரிவதில்லை. </p><p>இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். </p><p>சாலை சிதிலமடைந்துள்ளதால் அந்தப் பகுதி முழுவதும் தூசி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. </p><p>இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>மழைக் காலங்களில் இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பள்ளத்தின் ஆழம் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. </p><p>அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட இந்தப் பகுதியைக் கடக்க நீண்ட நேரம் ஆகிறது என சமூக ஆர்வலர் தெரிவிக்கின்றனர். எ</p><p>னவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனடியாக தலையிட்டு, ரயில்வே கேட் அருகே சேதமடைந்த சாலையைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
