ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்
9 May 2026, 12:40 am
<p><strong>ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்</strong></p><p>பெரம்பலூர், மே 8- பெரம்பலூர் மாவட்டத்தில் 3,742 மாணவர்களும், 3,464 மாணவிகளும் என மொத்தம் 7,206 மாணவ - மாணவிகள் தேர்வெழுதினர். </p><p>இதில், 3,470 மாணவர்கள் மற்றும் 3,342 மாணவிகள் என மொத்தம் 6,812 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். </p><p>மாணவர்கள் 92.73 சதவீதமும், மாணவிகள் 96.48 சதவீதமும் பெற்று பெரம்பலூர் மாவட்டம் 94.53 சதவீதத்துடன் மாநில அளவில் 23 ஆம் இடம்பெற்றுள்ளது. </p><p>ரஞ்சன்குடிகோட்டை, நக்கசேலம், கவுள்பாளையம், எளம்பலூர், மருவத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மாதிரிப்பள்ளி என 6 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. </p><p>தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><p>மேலும், தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ - மாணவிகள் தன்னம்பிக்கையுடன் துணைத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p> 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.</p><p> இதில் மாணவர் கோகுல் 594 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். </p><p>மாவட்ட அளவில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.</p>
