பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
10 Aug 2026, 12:00 am
<p><strong>பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>பெரம்பலூர், ஆக. 9- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சொசைட்டி முன்பு, மாவட்டத் துணைத் தலைவர் தோழர் செங்கமலை தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் சத்திய சீலன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.முத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை ஆற்றினார்.</p><p>இதில் பால் லிட்டர் 1-க்கு ரூ.10 விலை உயர்த்தி ரூ.45 ஆக வழங்க வேண்டும். ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி கொடுக்க வேண்டும். 50 சதவீதம் மானியத்தில் மாட்டு தீவனம், மாட்டு கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.</p>
