மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்!
10 Apr 2026, 5:30 am
<p><strong>மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்!</strong></p><p>கோழிக்கோடு: கேரளாவில் பின் ராயியில் உள்ள ஆர்.சி.அமலா யு.பி. பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்து ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசு செயல்பட்டுள்ளது" என்றார்.</p><p>நாட்டின் முன்னேற்றத்தில் ஐந்தாண்டு கால ஆட்சியில் எய்திய கேரள மக்களுக்குத் தெளிவான புரிதல் ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயக முன்னணியில் மட்டுமே வளர்ச்சியையும் நலத்திட்டங்களையும் ஒரே சீராக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.</p><p>கேரளம் ஊழலற்ற மாநிலமாக மாறியிருப்பதற்கு காரணம் எல்டிஎப்-இன் அரசியல் கலாச்சாரமே ஆகும். மக்கள் எல்டிஎப் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த தேர்தலை விட இந்த முறை மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p>
