மலைக் கிராமங்களுக்கு தார் சாலை தமிழக அரசுக்கு மக்கள் நன்றி
17 Feb 2026, 3:36 pm
<p><strong>மலைக் கிராமங்களுக்கு தார் சாலை தமிழக அரசுக்கு மக்கள் நன்றி</strong></p>
<p>கிருஷ்ணகிரி, பிப்.17- கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெட்டமுகிலாளம் ஊராட்சி, மேலூர் மற்றும் குல்லட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 653 இருளர் குடும்பங்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, வனத்துறை அனுமதியுடன் 10 கி.மீ தூரத்திற்குத் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். இதற்கு உதவிய முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ-க்கள் ஒய்.பிரகாஷ், டி.இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோருக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>
