ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்க திட்டம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு
11 Nov 2025, 3:41 pm
<p><strong>ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்க திட்டம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு</strong></p>
<p>ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநக ரான ஸ்ரீநகரின் அருகே உள்ளது ஜபர்வான் மலை. இது அரை வட்ட வடிவ மலைத் தொடர் ஆகும். பீர் பஞ்சால் மற் றும் இமயமலைகளுக்கு இடை யில் அமைந்துள்ளது. மலை யேறுபவர்களுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். இந்த மலைத்தொடரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் (பூ) தோட்ட மும் உள்ளது. இந்நிலையில், தால் ஏரியை ஒட்டியுள்ள இந்த இயற்கை எழில் கொஞ்சும் ஜபர்வான் மலையில் மத்திய ரிசர்வ் துணை ராணுவப் படைகளின் (சிஆர்பிஎப்) 61, 79, 117 மற்றும் 132 பட்டாலியன்களுக்கான பாதுகாப்புப்படை தளத்தை அமைக்க ஒன்றிய ராணுவ அமைச்சகம் திட்டமிட்டு, அப் பகுதி மக்களுக்கு ராணுவத் தரப்பில் இருந்து 40க்கும் மேற் பட்டோருக்கு இடமாற்ற நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஜபர்வான் மலை மீது சிஆர்பிஎப் தளம் அமைக்க ஸ்ரீநகர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உள்ளூர் வாசிகள் கூறுகையில், “ஜபர் வான் மலைகள் ஒரு பெரிய பசுமை மண்டலம் ஆகும். தால் ஏரியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் சிஆர்பிஎப் தளம் அமைக்கப்பட்டால் 50,000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் படும். துலிப் தோட்டமும் நாச மாகும். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் நெகிழ்வான தன்மை யை மேற்கு இமயமலை சாரல் இழக்கும். இமய மலைகளை சேதப்படுத்தும் பணி காஷ்மீ ருக்கு நல்லதல்ல. மேலும் உள் ளூர் மக்கள் இடம்பெயர்வு சூழலை சந்திக்க நேரிடும் என்ப தால், ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” என ஸ்ரீநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் “இந் தியா” கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், ஆளும் தேசிய மாநாட்டு கட்சி அரசாங்க மும் ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கோரி க்கை விடுத்துள்ளது.</p>
