ஆணாதிக்கமும் வரதட்சணைக் கொடுமையும்
6 Dec 2025, 6:20 pm
<p><strong>ஆணாதிக்கமும் வரதட்சணைக் கொடுமையும்</strong></p>
<p>மானுடராய்ப் பிறப்பது அரிது – அதில் பெண்ணாய்ப் பிறக்கும் போதே கூடவே பிறக்குது சகுனியாய் வரதட்சணை சிந்தனையும் முதலாளித்துவ சமூகத்தில் வரதட்சணைக் கொடுமை வீடுதவறாமல் நிலைப்படியாய் இருக்கின்றது ஆணாதிக்கம் விண்ணிற்குச் சென்று வந்த முதல்பெண் கல்பனா என்றாலும் சுருட்டு சுத்தும் சுதந்திரதேவியானாலும் வரதட்சணைக் கொடுமை விரட்டுது கல்யாணத்திற்கு முன் ஆயிரம் பொய் சொல்லி கட்டுவார் தாலியை பெண்வீட்டில் கறக்க திட்டம் போட மூணுமுடிச்சு அதில் ஏமாந்து போகுது மணப்பெண் கல்யாணம் கட்டிக் கிட்ட முதல் அழைப்பிலேயே ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் – அவள் வாழ்நாள் முதல் ஓயாது போராட்டம் குறைத்து போட்ட பவுன வாங்கிவர குடும்பமே ஒற்றை குரலாய் ஊதி எரியும் கொள்ளிக்கட்டை விரட்டுது வாழப்போன மகளை அரசு வேலைக்கு லஞ்சம் கொடுக்க ஐந்து , பத்து லட்சம்ரூபாய் பிறந்த வீட்டில் வாங்கி வர நிலைப்படியும் ஐந்து தலை நாகமாய் சீறிப் படமெடுத்தாடுது கொலை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை என பயந்து விஞ்ஞான முறையில் சிலிண்டர் வெடித்து சிதறிபோனாளே மகள் என வீடே ஒப்பாரி கணவன் கட்டிய தாலிக்கயிறு கழுத்தில் தொங்குது தூக்குக் கயிறாய் வாக்கப்பட்டு போன மாமியார்வீடு வழிகாட்டுது சுடுகாட்டிற்கு பசிக் கொடுமையை பொறுத்துக்கொள்ளும் மானுடம் வரதட்சணைக் கொடுமையை பொறுக்காது பிறந்த பெண் சிசுவுக்கு கொடுக்கும் சீம்பாலுக்கு- மாறாக கள்ளிப்பாலே சீம்பாலாகுது ஆணாதிக்கச் சிந்தனையின் உச்சக்கட்ட வரதட்சணையும் வஞ்சிக்கப்படும் பெண்ணினத்தையும் பாதுகாத்திட மனித குலத்திற்கு விழிப்புணர்வு ஏற்பட வீதி நாடகத்தாலும் தூரிகையாலுமே முடியும் என தமுஎகச நாளை கட்டியம் கூறும்! தஞ்சை கெ.அபிமன்னன்</p>
