முந்தய பக்கம்

போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் போராட்டம்

28 Dec 2025, 5:05 pm
போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் போராட்டம்
<p><strong>போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் போராட்டம்</strong></p> <p>உதகை, டிச.28- உதகையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், வெகு நேரமாக காத்திருந்த பயணிகள் கடுங்குளிரில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், உதகை அரசு &nbsp;போக்குவரத்துக் கழக பணிமனையிலி ருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங் களுக்கு 200க்கும் மேற்பட்ட அரசு &nbsp;பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன. இந்நிலையில், சனியன்று மாலை &nbsp;5 மணி முதல் 8 மணி வரை கோத்தகிரி, &nbsp;கூடலூர், நஞ்சநாடு உள்ளிட்ட உதகை &nbsp;சுற்றுவட்டாரப்புற கிராமங்களுக்கும், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிக ளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப் படவில்லை. இதனால் பனியின் தாக் கத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளா கினர். வெகு நேரமாகியும் பேருந்துகள் &nbsp;இயக்கப்படாததால், ஆவேசமடைந்த பயணிகள் உதகை பேருந்து நிலை யத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த பேருந்துகளை சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பயணி கள் கூறுகையில், கர்நாடகா, கேரளம் &nbsp;பேருந்துகள் சரியான நேரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், &nbsp;தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார் பில் இயக்கப்படும் பேருந்துகள் சரி யான நேரங்களில் இயக்கப்படுவ தில்லை. மேலும், கிராமப்புற பேருந்து கள் சரியானபடி இயக்கப்படாததால், பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு &nbsp;செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப் படைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி யான நேரங்களில் பேருந்துகளை இயக் குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram