நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: சர்ச்சை மசோதாவை தாக்கல் செய்யும் பாஜக!
18 Jul 2026, 8:50 pm
<p><strong> நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: சர்ச்சை மசோதாவை தாக்கல் செய்யும் பாஜக!</strong> </p><p>ஜூலை 20 திங்கட்கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொட ரில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் அல்லது அதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க வகை செய்யும் புதிய மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்கிறது. அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதா வை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கொண்டு வரப்படவுள்ள தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத் திருத்த மசோதா வுக்கு ஒன்றிய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இம்மசோதா சட்டமானால் வந்தே மாதரம் பாடலை அவமிப்பவர்களுக்கும் அதை பாடுவதற்கு தடை ஏற்படுத்துவோருக்கும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில், ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்லது பாடுவதை கட்டாயமாக்கி ஒன்றிய உள்துறை அமைச்ச கம் ஏற்கெனவே சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் மூலம் வந்தே மாதரம் பாடலை பாஜக அரசு வலிந்து திணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் அது தொடர்பான ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவை கொண்டு வருவதும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 இல் இருந்து 37 ஆக உயர்த்திய அவசர சட்டத்துக்கு ஒப்பு தலை பெறுவதற்கான சட்டத்திருத்த மசோதாவும் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளான வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறை சட்டத்திருத்த மசோதா, உயர் கல்வித் துறையை சீர மைக்கும் விக்சித் பாரத் கல்வி நிறுவன மசோதா ஆகியவையும் மக்களவையில் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.</p>
