பழனி கோவில் நில விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம்
14 Jul 2026, 9:51 pm
<p><strong>பழனி கோவில் நில விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம்</strong></p><p>சென்னை, ஜூலை 14 - பழனி கோவில் நில விவகாரம் தொடர் பான கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். </p><p> கரூர் இனாம் நில விவகாரத்தில் நயி னார் நாகேந்திரன் உள்ளிட்ட எதிர்க்கட்சி யினர் இனாம் நிலங்களை கோவில் நிலம் எனக் கூறி வருவதாகவும், இனாம் நிலத்துக்கும் கோவில் நிலத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் அவர்கள் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார். </p><p>இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலமாக அந்த இடங்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், பட்டா பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அங்கு வாழ்ந்து வருவதாகவும் அவர் விளக்கினார். </p><p>தனது உறவினர் ஒருவர் ரூ.100 கோடிக்கு நிலம் வாங்கியதாகப் பொய்ச் செய்தி பரப்பப்படுவதாகவும், அரசு மீது ஊழல் குற்றம் சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டினார். </p><p>நிலத்தை பதிவு செய்த சார் பதிவா ளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கரூரில் கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லை எனவும், கோவில் நிலங்களில் ஓர் இன்ச் நிலத்தைக்கூட யாருக்கும் கொடுக்க விருப்பமில்லை எனவும் அவர் தெரி வித்தார்.</p><p> பொய், புரட்டு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் எச்சரித்தார்.</p>
