தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி கொடைக்கானலில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி கொடைக்கானலில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு
<p><strong>பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி கொடைக்கானலில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு</strong></p><p>பழனி, ஏப். 10 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பழனி சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி கொடைக்கானல் பகுதிகளில், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி வீடு, வீடாக வாக்கு சேகரித்தார்.</p><p>வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கொடைக்கானல் இளவரசியான வில்பட்டியில் வாக்கு சேகரிப்பு பயணம் துவங்கியது. வேட்பாளர் என். பாண்டிக்கு, பறை இசை முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஆண்கள் பரிவட்டம் கட்டியும் தங்களின் பேராதரவைத் தெரிவித்தனர்.</p><p>வேட்பாளர் என். பாண்டியை, அருகில் இருந்த கோவில் மேடை மீது ஏற்றி சால்வை அணிவித்தனர். திமுக அரசின் மகளிர் நலத்திட்டங்கள் சமூக மேம்பாட்டு திட்டங்களை மேற்கோள்காட்டி பேசிய கூட்டணி கட்சித் தலைவர்கள் வேட்பாளர் என். பாண்டிக்கு வாக்கு சேகரித்தனர். மக்கள் மெல்ல-மெல்ல தேடிச் செல்ல வேண்டியதில்லை. என். பாண்டி வெற்றி பெற்றால், அவர் மக்களைத் தேடி வருவார் என்றும் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.