பாலக்காடில் சிபிஎம் அலுவலகம் மீது யுடிஎப் தாக்குதல் காவல்துறையினர் தாக்குதலில் 3 ஊழியர்கள் படுகாயம்
6 May 2026, 8:42 pm
<p><strong>பாலக்காடில் சிபிஎம் அலுவலகம் மீது யுடிஎப் தாக்குதல் காவல்துறையினர் தாக்குதலில் 3 ஊழியர்கள் படுகாயம்</strong></p><p>பாலக்காடு கேரளத்தில் பாலக்காடு தொகுதியின் யுடிஎப் சட்டமன்ற உறுப்பின ரான ரமேஷ் பிஷாரோடியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சிபிஎம் மாவட்டக்குழு அலு வலகம் தாக்கப்பட்டது.</p><p> அலுவல கத்துக்குள் புகுந்து காவல்துறை யினர் நடத்திய வெறியாட்டத்தில் 3 சிபிஎம் ஊழியர்கள் காயமடைந் துள்ளனர்.</p><p> சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பிஷாரோடியை காவல்துறை அதி காரிகள் ஓட்டலில் சந்தித்த புகைப் படம் ஒன்று வெளியாகி உள்ளது. </p><p>இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சிபிஎம் மாவட்டக் குழு அலுவல கத்தின் மீது யுடிஎப் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது அம்பலமாகி உள்ளது. </p><p>காவல்துறையினர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர்களைத் தாக்கியதும் இந்த சந்திப்பின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது. </p><p>யுடிஎப் தொண்டர்கள் காவல் துறையினரின் முன்னிலையில் மாவட்டக் குழு அலுவலகத்தைத் தாக்கினர். </p><p>போலீசாரின் தாக்குத லில் மூன்று எல்டிஎப் தொண்டர் கள் படுகாயம் அடைந்தனர்.</p>
