தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

31 Mar 2026, 4:50 pm
                          விளையாட்டு
<p><strong>பிரதமர் மருமகளை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் &nbsp;நசீம் ஷாவிற்கு ரூ.2 கோடி அபராதம்</strong></p> <p>பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் முதல் போட்டி யின் போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மருமகளுமான மரியம் நவாஸ் (பஞ்சாப் முதலமைச்சர்), லாகூரில் கடாபி மைதானத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். &nbsp;வளைகுடாப் போர் காரணமாக எரிபொருளைச் சேமிக்க லாகூர் மற்றும் கராச்சியில் ரசிகர்கள் போட்டிகளைக் காண தடை விதிக்கப்பட்டிருந்த சூழ லில், முதலமைச்சர் மரியம் நவாஸ் வருகை சர்ச்சையை ஏற்படுத்தி இருந் தது. இதனை குறிப்பிட்டு பாகிஸ் &nbsp;தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷா &nbsp;தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், &ldquo;நெருக்கடி காலத்திலும் கூட மரியம் நவாஸ் ஏன் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் ராணியைப் போல நடத்தப் படுகிறார்?&rdquo; என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 72,000 அமெரிக்க டாலர் (சுமார் 2 கோடி பாகிஸ்தான் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. &nbsp;இதுதொடர்பாக &nbsp;பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&rdquo;மத்திய ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும், சமூக வலைதள வழிகாட்டுதல்களையும் நசீம் ஷா &nbsp; மீறியுள்ளார். விசாரணைக்கு பிறகு, நசீம் ஷாவிற்கு 2 கோடி பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. &nbsp;மேலும், அவரது சமூக வலை தள ஆலோசகர் பணிநீக்கம் செய்யப் பட்டு, கருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். நசீம் ஷா தனது நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்&rdquo; என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><strong>பெண் என்று கூட பாராமல் ஏஐஎப்எப் தலைவர் தன்னை துன்புறுத்துகிறார் செயற்குழு உறுப்பினரான வலங்கா அலேமாவ் குற்றச்சாட்டு</strong></p> <p>அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF - ஏஐஎப்எப்) செயற்குழு உறுப்பினராக இருப்பவர் வலங்கா அலேமாவ் (பெண்). இவர் ஏஐஎப்எப் தலைவரான கல்யாண் சவுபே மற்றும் பிற அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகப் புகார் அளித்துள்ளார். &nbsp;இதுதொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், &ldquo;சவுபே, துணைத் தலைவர் என்.ஏ.ஹாரிஸ் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சத்யநாராயண் ஆகியோர் தன்னை மரியாதையற்ற முறை யில் நடத்துகின்றனர். தன்னை மிரட்டும் நோக்கில் அனு மதிக்கப்பட்ட அளவைத் தாண்டி சத்தமாகப் பேசியுள்ள னர். ஒரு பெண் உறுப்பினரை அவமானப்படுத்தும் இந்த &nbsp;போக்கைத் தடுக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என வலியுறுத்தியுள்ளார். &nbsp;பாஜக மூத்த தலைவரான கல்யாண் சவுபே 2022ஆம் ஆண்டு முதல் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.