கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத்
22 Jul 2026, 10:03 pm
<p>கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக் கிராமங்களின் மேம்பாட்டிற்காக சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசை புதனன்று (ஜூலை 22) பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி நேரில் சந்தித்தார். அப்போது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் வன்னி அரசு, கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி கூறினார்.</p>
