‘கண்ணியமாக நடந்து கொள்வீர்!’ பெ. சண்முகம் வேண்டுகோள்!
24 Jun 2026, 10:54 pm
<p><strong>‘கண்ணியமாக நடந்து கொள்வீர்!’ பெ. சண்முகம் வேண்டுகோள்!</strong></p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில், திங்களன்று நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். </p><p> அதில், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது” என்றும், அவ்வாறிருக்கையில், “சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, ‘அப்பாவைக் காணோம்’ என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது” என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், “இதற்கு எதிர் வினையாக, எதிர்க்கட்சித் தலைவர், கணவனைத் தேடும் மனைவி’ என்று பேசியதும் தவறுதான் என சுட்டிக் காட்டியிருக்கும் பெ. சண்முகம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என “இருதரப்பினருமே கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
