முந்தய பக்கம்

தீண்டாமையைக் கடைபிடிக்கும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் கூட்டம் - பெ.சண்முகம்

27 Apr 2026, 11:48 am
தீண்டாமையைக் கடைபிடிக்கும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் கூட்டம் - பெ.சண்முகம்
<p>தமிழகத்தில் ஜாதி இல்லாவிட்டால் அரசியல் இல்லை என கூறிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதிக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:</p><p>சாதியை பாதுகாப்பவர்களே சாதி செல்வாக்கு செலுத்துவது குறித்துப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதே!</p><p>சாதியை உருவாக்கிய கூட்டம், இப்போதும் அதைச் சரி என்று சாதிக்கும் கூட்டம், சாதிய அணிசேர்க்கைக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகமளிக்கும் கூட்டம், சாதியப் பாகுபாடுகளை, தீண்டாமையைக் கடைபிடிக்கும் கூட்டம் பாஜக - ஆர்.எஸ்.எஸ் என்பதை உலகம் அறியும்.</p><p>தேர்தல் அரசியலில் சாதி செல்வாக்கு செலுத்துவது குறித்து பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. &quot;பண்பாடு” என்ற பெயரில் சாதியைக் காப்பாற்றுவதற்கு அடிப்படையாக இருப்பவர்களே நீங்களும், உங்கள் மதமும் தானே! இவ்வறு பதிவிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram