முந்தய பக்கம்

மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலுறுப்புகள் தானம்

18 Jan 2026, 4:50 pm
மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலுறுப்புகள் தானம்
<p><strong>மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலுறுப்புகள் தானம்</strong></p> <p>கோவை, ஜன.18- சாலை விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த நபரின், உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், வடபருத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் நாட்டுதுரை (34). &nbsp;இவர் கடந்த ஜன.15 ஆம் &nbsp;தேதியன்று மாலை இரு சக்கர வாகன விபத்து ஏற் பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் திண்டுக் கல் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு &nbsp;வந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்ட நிலையில், ஜன.16 ஆம் தேதியன்று நாட்டுதுரைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனை மருத்து வர்கள் உடலுறுப்பு தானம் பற்றி அவரது உற வினர்களிடம் எடுத்துக் கூறியதை தொடர்ந்து, &nbsp;அவரது குடும்பத்தினர் உடலுறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி ஆலோசனையின் படி, தமிழ்நாடு &nbsp;உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி, உடலுறுப்பு தானம் மேற்கொள்ளப் பட்டது. அதன்படி அவரது கல்லீரல், 2 &nbsp;சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை &nbsp;கோவை அரசு மருத்துவக்கல்லூரி உட்பட &nbsp;தனியார் மருத்துவமனைக்கு,ம் சேலத்தி லுள்ள தனியார் மருத்துவமனைக்கும் தான மாக அளிக்கப்பட்டன. இதன்பின் நாட்டு துரையின் உடலுக்கு கோவை அரசு மருத்துவ மனை முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தி உடலை உறவினர்களிடம் ஒப் படைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram