100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து மகாத்மா காந்தி பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு
30 Dec 2025, 4:07 pm
<p><strong>100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து மகாத்மா காந்தி பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு</strong></p>
<p>தேனி, டிச.30- மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, நிதி பங்களிப்பை குறைத்து கிராமப்புற ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தேனியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங் கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் பெயரை “விபிஜி ராம்ஜி” என பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு அண் மையில் திருத்தம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலு வலர்கள் சங்கத்தினர் செவ் வாயன்று ஒரு நாள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடு பட்டனர். தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் த.சரவணன் வர வேற்று பேசினார். முன்னாள் மாவட்டத் தலைவர் கே. துரைராஜ் தொடங்கி வைத் தார். போராட்டத்தை ஆத ரித்து முன்னாள் மாவட்டச் செயலாளர் க.கனகராஜன், மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் பா.ராம மூர்த்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அன்னலட்சுமி ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் க.முத்துக்குமார் நிறைவு செய்து பேசினார். மாவட்ட பொருளாளர் ச. முனிராஜ் நன்றி கூறினார். உண்ணாவிரதத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டி பட்டி, கடமலை - மயிலை, போடிநாயக்கனூர், சின்ன மனூர், உத்தமபாளையம் மற்றும் கம்பம் ஆகிய 8 ஊரா ட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அலுவலர்கள், அதி காரிகள் என சுமார் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.</p>
